Saturday, July 13, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயனம் (ப்ரம்ம லிபி)




Date: Sat Jul 13, 2002 9:00 pm
From: "suba k."
Subject: Svethasvathara Upanishad - Part 1
To: meykandar@egroups.com

முதற் காண்டம் - விளக்கம்

- இந்தப் பகுதி ச்வேதாச்வதரர் என்ற மாமுனிவர் உபாதேசம் செய்வித்ததால் அவரது பெயரையே கொண்டு விளங்குகின்றது.
- 'சுவேத' என்பது வெண்மையையும், 'அச்வதர' என்பது குதிரையின் வர்க்கத்தையும் (அல்லது இந்திரியக் கூட்டத்தையும்) குறிப்பவை.(அகமும் புரமும் தூய்மையானவர் என்பதை குறிப்பது)
- இந்த உபநிஷத் கிருஷ்ண யஜூர் வேதத்தைச் சார்ந்தது.

தொடர் சிந்தனை:
வேதனைகளும் சோதனைகளும் நம்மைத் தாக்கி உலுக்கும் போது தெளிவை நாடி நாம் நமக்குள்ளே செல்லச் செல்ல நம்மை நாம் மீண்டும் மீண்டும் "ஏன் பிறந்தோம்? எதற்கு பிறந்தோம்? என்று அலுக்காமல் சலிக்காமல் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றோம். விடை கிடைக்கின்றதா..?

நமது கன்ம வினைகளால் இந்த உலகில் பிறந்து இப்போது கிடைக்கின்ற வாழ்க்கையை வாழ்கின்றோம் என்று ஒரு வகையாக மனதை தேற்றிக் கொண்டாலும், சரி முடிவு எங்கே..? இறந்ததும் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தொலைந்து விடுவோமா..? என்று நினைக்கும் போதே மனதை பிசைகின்ற அளவுக்கு தொண்டையில் நீர் வற்றி விடுகின்ற அளவுக்கு ஒரு பயம் நமக்கு தோன்றுகின்றதே..?
உண்மையில் எனக்கு முடிவென்று ஒன்று இருக்கின்றதா..?
அது என்ன நிரந்தர முடிவா அல்லது நான் என்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வேறு ஒரு வடிவம் பெறுவேனா..?
இந்த சுழற்சி என்றாவது நிற்குமா?
நிற்கும் போது நான் மட்டும் இருப்பேனா அல்லது என்னோடு வேறொன்றும் இருக்குமா..?

அலுவலகத்தில் எனது மேற்பார்வையின் கீழிருக்கும் வாடிக்கையாளர் நிறுவனம் ஒன்றிற்கு இரண்டு செர்வர் ரக கணினிகளை, அவை இயங்கக் கூடிய வகையில் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஒன்று L class HP-UX ரக செர்வர். மற்றொன்று K class HP-UX ரக செர்வர். இரண்டுமே ஒரே விதமான Operating System கொண்டு இயங்க வேண்டும். இவை இரண்டையும் அது அதற்குத் தகுந்த மென்பொருட்களை ஏற்றி அதற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு. மென்பொருட்கள் ஒவ்வொன்றையும் தேடி அதன் அடிப்படை இயலியின் (hardware) தரத்தை அறிந்து அதற்குத் தக்கவாறு அமைக்க வேண்டும். இரண்டுமே வெவ்வேறு தொழில்நுட்பத்தைக் கொண்டே இயங்கக் கூடியவை.

இந்த இரண்டு செர்வரில் ஒன்று புதியது; மற்றொன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு ஆனால் Operating System அழிக்கப்பட்டு, அது இயங்கியதற்கான எந்தத் தடயமுமே இல்லாத அளவிற்கு பூஜியமாக இருப்பது. அதாவது, மனிதன் இறந்து மீண்டும் மறு பிறவியைப் பெற்று வாழ வரும் போது எப்படி பழைய எச்சங்களின் தொடர்ச்சி அறவே அற்றுப் போய் வருகிறதோ, அப்படிப்பட்டது!

மென்பொருட்கள் ஒவ்வொன்றாக ஏற்ற ஏற்ற செர்வரின் இயக்கம் படிப்படியாக வளர ஆரம்பித்தது. முதலில் அந்த செர்வர் தன்னை அறிந்து கொள்ள ஒரு operating System; பிறகு அது தனக்குள்ளே அடங்கியிருக்கின்ற பொறிகளையும் கருவிகளையும் (disk, tape drives, Lan cards) அறிந்து கொள்ள பிரத்தியேகமான மென்பொருட்கள் (drivers). எல்லாம் சேர்த்த பிறகு செர்வரின் இயக்கம் சீராக ஒழுங்காக இருக்கின்றதா என்பதை கண்காணிப்பதற்கு ஓரு மென்பொருளையும் ஏற்றியாயிற்று (Monitoring software). இதற்கும் மேலாக இந்த இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் இயக்கத்தையும், செயல்பாடுகளைப், போக்குகளையும், 'நிமிடாந்திர' அறிக்கையைக் கொடுப்பதற்கான மென்பொருளையும் சேர்த்தாயிற்று. எப்படி நாம் வாக்காலும், மனத்தாலும் உடம்பாலும் இழைக்கின்ற ஒவ்வொரு செயலும் கன்மக் கனக்கில் பதிவாகின்றதோ அதைப் போல இங்கே செர்வரின் இயக்கத்தை உண்ணிப்பாகக் கவனிக்க இந்த ஏற்பாடு.

வேலை முடிந்தது. நான் சிந்தித்து செயல்படுத்திய லிபியின் படி இந்த இரண்டு 'இயந்திர உயிர்களும்' இயங்க ஆரம்பித்து விட்டன!

உருவாக்கிய எனக்கு பரம திருப்தி. இங்கு பிரம்ம தேவன் நானே!

இயந்திரத்தை படிப்படியாக இயங்க வைக்க பல நுண்ணிய அபாரமான செயல் திரம் மிக்க மென்பொருட்கள் அடிப்படையாகின்றன. அதேபோல ஆன்மாவிற்கு ஒரு தக்க உடலைக் கொடுத்து, வலு கொடுத்து, நோக்கத்தை கொடுத்து இயங்க வைக்க எந்த விதமான ' மென்பொருள்' தேவை என்பதை நினைக்கும் போது இறைவனின் எல்லயற்ற அளவிலா சக்தியின் மகத்துவத்தைக் கூற வார்த்தையில்லாமல் போகின்றது.

அந்த வகையில் ச்வேதாச்வதர உபநிஷத்து இறைவனின் அளப்பறிய சக்திகளை விளக்குவதாகவும், ஆண்மா இறை சக்தியினாலேயே இறைவனை அறிவதாயும் கூறுகின்றது. இந்த உபநிஷத்து முன்பு நாம் கண்ட ஏனைய மூன்றையும் விட சற்றே வேறு பட்டதாகவே எனக்குத் தெரிகின்றது. இந்த முதல் காண்டத்தில் பேசப்படுகின்ற விஷயங்கள் சைவ சித்தாந்த நோக்கில் ஆன்ம விசாரனை செய்யும் போது கேட்கின்ற அடிப்படைக் கேள்விகளைக் எழுப்புவதாக அமைகின்றன.

"எல்லா உயிர்களும் வாழ்கின்ற இந்த பிரம்ம சக்ரத்தில் ஆத்மா சுற்றிச் சுற்றி பல வேடங்களைத் தரித்து வாழ்ந்து, பின்னர் தன்னை இயக்குவிப்பவன் இறைவனே என அறிந்து அவனால் அருள் பெற்று 'அவனாகவே ஆகி' சாகா நிலையை பெறுவதாக ஒரு சுலோகம் செல்கின்றது. இன்னொரு சுலோகத்தில், "அறிகின்ற அறிவும் அறியப்படும் பொருளும், ஆள்கின்ற சக்தியும் ஆளப்படுகின்ற அதுவும், அனுபவிக்கின்ற உயிரும் அனுபவிக்கின்ற பொருளுக்கும், ஒரு உறவைத் தருவதாக" மாயை குறிக்கப்படுகின்றது. இவை, அனுபவிக்கின்ற ஜீவன், அனுபவத்தைக் கொடுக்கின்ற பகவான், இவற்களுக்குள் தொடர்பினை ஏற்படுத்தும் மாயை இவை மூன்றுமே பிரம்மம்". பதி பசு பாசம் இவை மூன்றும் அநாதியெனப் பகரும் சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கைக்கு மூலக் கருத்துகள் இங்கே஧ யும் கூறப்படுவது கவனித்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று!

இரண்டு செர்வர்களுக்கும் மென்பொருட்களை ஏற்றி அதனை இயங்க வைத்தாயிற்று; ஆனால் இந்த செர்வரை பயன்படுத்துகின்ற பயனீட்டாளர்கள் கூட்டம் அட்லாண்டாவிலும் சிங்கப்பூரிலும் ஜெர்மனியுலும் பறந்து விரிந்து இருப்பதால் அதற்குத் தேவையான தொடர்புகளை (network configuration) ஏற்படுத்த வேண்டியது அடுத்த வேலையாகிப் போனது. ஆக அதனைச் செய்ய, சரியான ஒரு IP address கொடுத்து பயனீட்டாளர்களைக் கண்டு கொள்வதற்காக அவர்களின் செர்வர்களின் பொதுவான IP address யும் கொடுத்து இந்த செர்வர்களெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் வகையில் இணைப்பினை ஏற்படுத்தியாயிற்று. இப்பொது தொடர்புகள் செயல்பட ஆரம்பித்துவிட்டன. உலகத்தின் வெவ்வேறு பகுதியில் இருக்கின்ற எந்த பயனீட்டாளர்களும் ஒரு குறிப்பிட்ட IP address மூலமாக எவ்வாறு அந்த செர்வரைக் கண்டுகொள்கின்றார்களோ அதே போல கண்ணுக்குத் தெரியா மெல்லிய தொடர்பு ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. செர்வருக்கு எவ்வாறு upgrade, alert notification, status report எல்லாம் management செர்வரிலிருந்து கிடைக்கின்றதோ அதைப் போலவே, உடலெடுத்த ஆன்மாக்களுக்கும் upgrade நடந்து கொண்டே தானிருக்கின்றது. ஆன்மாவின் செயல், அது எடுக்கின்ற முடிவு, அதனால் விளையக் கூடிய பின் விளைவுகள் அனைத்தும் ஒவ்வொரு கணமும் கன்ம வங்கியில் சேர்க்கப்பட்டு எப்போது ஆன்மா தன்னையே தான் அறிந்து தன் ஆன்ம விடுதலைக்கு இறையே காரணம் என் தெள்ளத் தெளிவாக உணர்கின்றதோ அன்றே இறுதி விடுதலையையும் பெறுகின்றது. இந்த நிலையை அடையும் வரையில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்வதே விதி!


கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தாற்போல்
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?


இரும்பில் கனல் மூட்டி இவ்வுரு போய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்?


நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்ப விட்டு
வெட்ட வெளியில் விரவி நிற்பது எக்காலம்?

[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]



தொடரும்.....


அன்புடன்
சுபா


From: "S.Thiru"
Date: Sun Jul 14, 2002 4:18 pm
Subject: Re: [meykandar] Svethasvathara Upanishad - Part 1

வணக்கம்

யதார்த்த நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் செல்கின்றது

பாராட்டுகள்
தொடரட்டும் பணி

அன்புடன்
திரு


From: "Dr K.Loganathan"
Date: Sun Jul 14, 2002 3:40 am
Subject: Re: [meykandar] Svethasvathara Upanishad - Part 1

அன்பின் சுபா,
முதலில் இந்த புதுமைச் சிந்தனை மிக்க கட்டுரைக்கு எனது வாழ்த்துக்கள். ஏற்புடைய பழைய கருஹ்துக்களுக்கு புதுமை வடிவம் தரவேண்டும். காலத்தின் கட்டாயம். அவ்வகையில் கணினியியத்திற்கும் மந்திராயணத்திற்கும் முடிச்சு போடுவது மிகவும் ஏற்புடைத்து. பெரிதும் வளர்க்கப்பட வேண்டிய சிந்தனாபோக்காகும்.

நான் ஏற்கனவே பன்முறை கூறியிருப்பது போல, Cyber Space என்பது மந்திரவுலகுதான், வேறில்லை. மந்திராயணத்தின் பிறிதொரு வடிவமே கணினியம். இதனால் போலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இத்துறையில் மிகவும் சிறந்து விளங்கின்றார்கள்!

நிற்க இத்தோடு தொடர்புடையதாக இன்னொரு தேவையும் இருக்கின்றது. ஆன்மாவை இறைவன் ஆட்டுவிக்கின்றான், அவன் ஆட்டுவிகக நாம் ஆடுகின்றோம். ஆனால் ஒவ்வொரு ஆன்மாவையும் எப்படி ஆட்டுவிக்கின்றான், இதனை எப்படித் துல்லியமாக் அறிவது என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.

இங்கு தான் தருத் தேர்வு உதவுகின்றது. எந்த வகை மென்பொருள் ஓர் ஆன்மாவின் அறிவினை இயக்குகின்றது என்பதை இந்தத் தருத்தேர்வின் வழி துல்லியமாக அறிந்துகொள்ளலாம். காட்டாக இன்று நான் இட்ட பகுதியில் விளக்கியிருக்கும் விருட்சங்களின் பொதுக் கூறுகள்.

விரக்தி கவலை வேதனை போன்றவை நம்மை நாம் அறியாதே தாக்குகின்றன. தருத்தேர்வில் இது கனிகள் போக்கப்பட்டதாகவும் கிளைகள் வெட்டப்பட்டதாகும் இன்னும் இதுபோன்றும் வெளிப்படும். இவற்றை deletion operations என்று கூறியிருக்கின்றேன். இதனை இறைவன் நடத்தும் சங்காரத் தாண்டவம் எனினும் அமையும்.

இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு தமிழர்களிடையே வரவேற்பு இல்லை. பேருறக்கத்திலிருந்து இன்னும் இவர்கள் விழிக்கவில்லை. விரைவில் விழிப்பார்கள் இப்படிப்பட்ட புதுமைகளையும் வரவேற்றுப் போற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் நலமே தொடர்வோம்.

உலகன்


From: "ksuba100"
Date: Sun Jul 14, 2002 9:12 pm
Subject: Re: Svethasvathara Upanishad - Part 1

அன்புள்ள முனைவர் லோகா,
தங்களின் வாழ்த்துக்கள் நல்ல பல கட்டுரைகளை மேலும் நான் படைப்பதற்கு ஊக்கமளிப்பவை.நன்றி

> இங்கு தான் தருத் தேர்வு உதவுகின்றது. எந்த வகை மென்பொருள் ஓர் ஆன்மாவின் அறிவினை இயக்குகின்றது > என்பதை இந்தத் தருத்தேர்வின் வழி துல்லியமாக அறிந்துகொள்ளலாம். காட்டாக இன்று நான் இட்ட பகுதியி ல் > விளக்கியிருக்கும் விருட்சங்களின் பொதுக் கூறுகள்.

உலக இயக்கத்திற்கு அடிப்படையாக அமைவது மந்திர சக்திகளே. ஒவ்வொரு மந்திர சக்திகளும் எவ்வாறு அதனதன் தன்மைக்கு ஏற்றார் போன்று இயங்கி உயிர்களுக்கு நாட்டத்தைக் கொடுத்து செயல்பட வைக்கி ன்றது என்பது போன்ற கருத்துக்களை நாம் பல முறை விவாதித்திருக்கின்றோம். அதிலும் தங்களின் திருநெறித் தெளிவு தருகின்ற விளக்கம் ஆழமான, தெளிவான கருத்துக்கள். தங்களின் விருட்சத் தேர்வு அதனை வெளி ப்படையாகக் காட்டுவது மிக்க உண்மை.

> இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு தமிழர்களிடையே வரவேற்பு இல்லை. பேருறக்கத்திலிருந்து இன்னும் இவர்கள் > விழிக்கவில்லை. விரைவில் விழிப்பார்கள் இப்படிப்பட்ட புதுமைகளையும் வரவேற்றுப் போற்றுவார்கள் என்ற > நம்பிக்கையில் நலமே தொடர்வோம்.

தமிழ் மக்கள் இன்னமும் ஆழமான சிந்தனைக்குள் செல்ல மறுக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலோட்டமாக சடங்குகளில் மூழ்கி நாமும் பக்தி செய்தோம் என்று நினைப்பதிலேயே திருப்தி அடைந்து விடுகி ன்றனர். இங்கு கூட ஜெர்மானிய நண்பர்கள் கேட்கின்ற ஆழமான கேள்விகளை தமிழ் மக்கள் கேட்டு நான் அறி ந்ததில்லை. இன்று பிள்ளையார் கோயிலின் மண்டலாபிஷேகம் சென்றிருந்தேன். ஆலய நிர்வாகம் மிக்க ஆர்வத்துடன் மக்கள் சொற்பொழிவுகளையும் கேட்டு சிந்தனைக்கும் ஆலயம் இடம் தர வேண்டும் என்ற உந்துதலில் இரண்டு சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்திருந்தது. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் குமரன் அவர்களும் நானும் சொற்பொழிவு செய்தோம். ஆனால் யாருக்கும் கேள்வி கேட்க மனமி ல்லை.உந்துதலும் இல்லை. இளம் வயதினர் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பெரியோர் தனக்குத் தெரிந்தது போதும் என சடங்குகளோடு நின்று விடுகின்றனர்.

ஜெர்மானிய நண்பர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு இந்து சமயத்தில் தெரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக நினைக்கின்றனர். ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு மனம் அமைதி அடையும் வரையில் துருவித் துருவி கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க வைக்கின்றனர். மேலும் இப்போது பெரும் அளவில் meditation வகுப்புக்கள் பரவலாக ஜெர்மானியர்களிடையே நடைபெறுகின்றன. மேலும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பல ஜெர்மானிய இளைஞர்கள் புத்த மதத்தில் சேர்ந்து அக்கொள்கைகளைப் பின்பற்ற அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது கோடைகால ஒருவார வகுப்புக்கள் பரவலாக சுவிஸின் பல நகரங்களிலும் மற்றும் ப்ரான்ஸ் எல்லை கிராமங்களிலும் நடைபெறுகின்றன. இங்கு சென்று புத்த மதத்தைக் கற்று அவ்வழியில் செல்வது பல ஜெர்மானிய இளைஞர்களின் ஓய்வு நடவடிக்கையாகவும் இருக்கின்றது.

இதைப் போன்ற பல நடவடிக்கைகள் ஐரோப்பாவில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் நடைபெற வேண்டும். மக்கள் சமயத்தை ஒரு சடங்காக நினைத்து இறைவனைத் தள்ளி வைப்பதற்கு பதிலாக, இறைசக்தி தன்னுள்ளிருந்து பிரி க்கப்பட முடியாத ஒன்று என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து வாழ வழிகாட்டுபவையாக இந்த நிகழ்வுகள் இருக்க வேண்டும்.

அன்புடன்
சுபா


From: Njaanavettiyaan
Date: Sun Jul 14, 2002 6:16 pm
Subject: Re: [meykandar] Svethasvathara Upanishad - Part 1

அன்பின் சுபா,

வணக்கம்.
வாழ்த்துக்கள்.
கடினமான ஒன்றை எளிமையாக விளக்குவது ஓர் அற்புதக் கலை. கணிணியைப் பற்றி அறிந்தவர்கள் நன்கு இரசித்திருப்பர்.

மெய்ஞானப் புலம்பல் அருமை! மிக அருமை!!

செர்மானிய எழுத்தாளர் "Bo Van Derick" எழுதியுள்ள "Chariots of God" & "Return of Gods" என்னும் இரு பொத்தகங்களிலும், நாமெல்லாம் "pre-programmed robots"(தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை - உதவி) எனவும், விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறிய மற்றுமொரு நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்தவர்களைக் கடவுளாகப் பாவிக்கிறோம் எனவும், இன்னும் பல விடயங்களையும் ஆதாரங்களுடனுடம் புகைப்படங்களுடனும் எழுதியுள்ளார். இத்துடன் ஒத்துநோக்குங்கால், தாங்கள் எழுதியுள்ளது ஏற்புடைத்தே.

>இந்த சுழற்சி என்றாவது நிற்குமா? நிற்கும் போது நான் மட்டும் >இருப்பேனா அல்லது என்னோடு வேறொன்றும் இருக்குமா..?

தீர்க்க தெரிசனங்களை நம்புபவர்கள் கூறுவர்: விவிலிய வேதம் 13ம் அதிகாரம்:
"மிருக குணங்களைக் கொண்ட ஒரு அதிசய மனிதன் பூமியில் அரசாளுவான். மிகுந்த வல்லமையுடன் அவன் விளங்குவான். மரித்தோரை உயிர்ப்பிக்கும் அளவுக்கு அவனுக்கு அறிவு இருக்கும்." ...........வெட்டுப்பட்ட கைகள் ஆனாலும், கால்கள் ஆனாலும் அதை அதிசயத்தக்க வகையில் ஒட்டின வடு தெரியாமல் ஆக்கும் வல்லமை உடையவன். இதுவரை விஞ்ஞானம் கண்டறியாத விஞ்ஞையான செயல்களை நடத்திக் காடுவான். கடவுளுக்கீடான நாமம் கொடுத்து எல்லோரும் வணங்கும்படியான கோவில் ஏற்படுத்தப்படும். இங்கு, நேற்றய கனவு இன்றைய நடப்பு என்பதை நினைவில் கொண்டால், ஆங்கிலத் திரைப்படமான "Universal Soldier" இன்றைய கனவு. நாளை ஏன் மெய்ப்படக்கூடாது. பிரளய காலத்தில் அழிவதுறுதியே. ஆயினும், ஒரு சில சீவர்களும், சீவராசிகளும் எஞ்சி நிற்கும். அவர்களே பல்கிப் பெருகி வாழ்வார்கள் என "Nosterdamus" எழுதியுள்ளார்.

>உருவாக்கிய எனக்கு பரம திருப்தி. இங்கு பிரம்ம >தேவன் நானே!

ஆம். நாமே பிரம்ம தேவன். எண்ணங்களாலும், செயல்களாலும் படைக்கும் ஒவ்வொரு படைப்பும் நம்மைத்தான் பிரம்மதேவன் எனக் கூறும். ஆக, நாமே பிரம்மம்.

>ஆன்மாவிற்கு ஒரு தக்க உடலைக் கொடுத்து, வலு கொடுத்து, >நோக்கத்தை கொடுத்து இயங்க வைக்க எந்த விதமான >'மென்பொருள்' தேவை என்பதை நினைக்கும் போது >இறைவனின் எல்லயற்ற அளவிலா சக்தியின் மகத்துவத்தைக் கூற >வார்த்தையில்லாமல் போகின்றது.

உண்மை. உண்மை.

>ஆன்மாவின் செயல், அது எடுக்கின்ற முடிவு, அதனால் விளையக் >கூடிய பின் விளைவுகள் அனைத்தும் ஒவ்வொரு கணமும் கன்ம >வங்கியில் சேர்க்கப்பட்டு எப்போது ஆன்மா தன்னையே தான் அறிந்து >தன் ஆன்ம விடுதலைக்கு இறையே காரணம் என் தெள்ளத் >தெளிவாக உணர்கின்றதோ அன்றே இறுதி விடுதலையையும் >பெறுகின்றது.

கற்றதைப் புரிந்து, அது ஏன், எதற்கு என தனக்குள்ளே தர்க்கம் செய்து, கிடைக்கும் விடையினால் தெளிந்து, அதை கருத்தாக்கி, நினைவிலேற்றிப் பின் உணர்ந்தால் விடுதலை நிச்சயம்.

>இரும்பில் கனல் மூட்டி இவ்வுரு போய் அவ்வுருவாய்க்
> கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்?
ஒளவைக்குறள்
143. கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.
சாத்திரங்களில் விரவியிருக்கும் இறையை அறியும் மனு மூன்று வகை:
உத்தமர்: ஆகமங்களை நோங்கிக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் பக்குவப் படுத்தி ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக்கொண்டு, சக்கையை எறிந்துவிடுவர். இவர்களைக் குறித்து, "கரும்பினிற் கட்டியும்" என்றார்.

மத்திமர்: ஆகமங்களைக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் புரிந்தவரை பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் விளங்கியபடி இயன்றவரை ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக்கொண்டு, நூலையும் பாதுகாத்து வைப்பர். சாற்றைப் பிரித்துவிட்ட பின், மிகுதி உள்ளவரையில் நீக்கவேண்டியதையும் உள்ளிழுத்துக் கொள்வர். சக்கையாகிய தயிரையும் உட்கொள்வர்.
அதனால், "காய் பாலில் நெய்" என்றார்.

அதமர் : ஆகமங்களையே அறியார். அறிந்தாலும் சாற்றை உட்கொள்ள இயலவில்லை. இது குறித்தே, "இரும்புண்ட நீர்" என்றார். அதாவது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டு எப்படி நீரை உட்கொண்டு பிரகாசமுள்ள வண்ணத்தையும் இழக்கும் நிலையாம்.

எதுவும் சாத்தியமே என நினைந்து,

அன்புடன்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
அளிமிகு நண்பர் திரு. அவர்கட்கு,
வணக்கம்.

நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
போய்ப் பாருங்கள்:
http://www.geocities.com/enjayan2000/index.htm


From: "ksuba100"
Date: Sun Jul 14, 2002 9:44 pm
Subject: Re: Svethasvathara Upanishad - Part 1

அன்புள்ள திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு

வணக்கம்
நன்றிகள் பல!
> மெய்ஞானப் புலம்பல் அருமை! மிக அருமை!!
பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் என் மனதைக் கரைக்கும் வல்லமை படைத்தவை. இச்செய்யுள் வரிகளைப் படிக்கும் போது நம்மை மறந்து பரம்பொருளோடு இரண்டறக் கலந்து விட முடிகின்றது. ஒவ்வொரு சொற்களும் சிறந்த கருத்துக்கள் நிறைந்தவையாக இருக்கின்றன.

> செர்மானிய எழுத்தாளர் "Bo Van Derick" எழுதியுள்ள "Chariots of God" & "Return of > Gods" என்னும் இரு பொத்தகங்களிலும், நாமெல்லாம் "pre-programmed robots"(தமிழ்ச் சொல் > கிடைக்கவில்லை - உதவி) எனவும், விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறிய மற்றுமொரு நட்சத்திர > மண்டலத்திலிருந்து வந்தவர்களைக் கடவுளாகப் பாவிக்கிறோம் எனவும், இன்னும் பல விடயங்களையும் > ஆதாரங்களுடனுடம் புகைப்படங்களுடனும் எழுதியுள்ளார். > இத்துடன் ஒத்துநோக்குங்கால், தாங்கள் எழுதியுள்ளது ஏற்புடைத்தே.

இந்த நூலை நான் வாசித்ததில்லை. ஆனால் இந்தக் கருத்து பிடித்திருக்கின்றது. நாமெல்லாம் "pre- programmed robots" என்று சொல்வது மிக மிக உண்மை என்றே எனக்குப் படுகின்றது.ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏறப வித்தியாசங்கள் தெரிந்தாலும், பல ஒரே மாதிரியான தன்மைகள கொண்ட மென்பொருட்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டுமன்றறி பிற உயிரினங்களுக்கும் இது பொருந்துகின்றது. மிக ஆழமான ஆதே சமயத்தில் சுவாரசியமான விஷயம் இது.

> ஒளவைக்குறள்
> 143. கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
> இரும்புண்ட நீரு மியல்பு.

இரண்டே வரிகளில் எத்தனை ஆழமான விளக்கம் பொதிந்து கிடக்கின்றது? மேலும் எழுதுங்கள். இம்மாதிரியான விளக்கங்கள் என்னைப் போன்ற சித்தர் பாடல் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

அன்புடன்
சுபா