எத்தனை நாளுக்குத்தான் அலுவலகத்திலேயே உட்கார்ந்து கொண்டிருப்பது? வருடக் கடைசி; கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்று எனது குழுவில் அனைவரும் அவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்க நான் ஊரை விட்டே ஓடுவதுதான் நல்லது என்று நினைத்து விமான டிக்கட்டை எடுத்துக் கொண்டு பறந்து விட்டேன். எங்கே என்று கேட்கின்றீர்களா? தென் ரியாவுக்குத்தான்.
ஜெர்மனியில் தான் குளிர் வாட்டுகின்றது என்றால் தென் கொரியத் தலைநகரான சியோலிலும் குளிர் அதிகமாகத்தான் இருக்கின்றது.
குளிர் -3 டிகிரிக்குச் சென்றாலும் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. குளிர் ஜேக்கட்டை அணிந்து கொண்டு சியோலை சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டேன். வருகின்ற நாட்களில் இந்த வலைப்பூவில் எனது சியோல் பயணக் கட்டுரை வெளிவரும், படங்களோடு..:-)
Friday, December 19, 2003
Monday, December 8, 2003
Ilayaraja
இளையராஜாவின் பால்நிலாப் பாதை என்ற புத்தகத்தை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன். தனது வாழ்க்கை அனுபவங்களை உரைவீச்சாகவும் கட்டுரையாகவும் தந்திருக்கின்றார் இளையராஜா இந்த நூலில். இதற்கு முன்னுரையாக இனிய கவிதைகளாக அமைந்திருக்கின்றன பாரதிராஜவும் கமலஹாசனும் கொடுத்திருக்கும் நட்பு மிகுந்த அனிந்துரைகள்.
எளிமையான எழுத்து. மிகச் சாதரணமாகத் தான் கடந்து வந்த பாதை, இளம் வயது அனுபவங்கள், இசைப்பயணத்தில் கிடைத்த நட்பு, ஆசிரியர்கள், மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இந்த நூலில்.
மிகப் பெரிய இசை ஜாம்பவானாக இருந்த போதும் தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை, தன்னுடைய எண்ணங்களை, தனது பயத்தை, தனது செயலை எடுத்துச் சொல்வதன் வழி படிக்கின்ற வாசகர்களுக்குக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் இவரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகளும் புரிந்துணர்வும் வெளிப்படுகின்றன.
படித்து ரசிக்க வேண்டிய ஒரு நூல்தான் இது. அரும்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் விலை ரூ. 75 நூலிலிருந்து சில வரிகள்:
"ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிப்போய் மகிழ்ந்திருந்தாலோ விலகிப்போய் வருந்தியிருந்தாலோ அதிலிருந்து ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று நம்பலாம்.
எனக்குச் சாதாரணமாகப் படுவது உங்களுக்குக் கற்றுக் கொள்ளும் ஓர் உயர்ந்த விஷயமாகவும்
உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றுவது எனக்கு விசேஷ அம்சம் உடையதாகவும் இருக்கலாம். நீங்களும் நானும் கற்பது - நிற்கப்போவதில்லை என்பதே உண்மை. "
எளிமையான எழுத்து. மிகச் சாதரணமாகத் தான் கடந்து வந்த பாதை, இளம் வயது அனுபவங்கள், இசைப்பயணத்தில் கிடைத்த நட்பு, ஆசிரியர்கள், மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இந்த நூலில்.
மிகப் பெரிய இசை ஜாம்பவானாக இருந்த போதும் தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை, தன்னுடைய எண்ணங்களை, தனது பயத்தை, தனது செயலை எடுத்துச் சொல்வதன் வழி படிக்கின்ற வாசகர்களுக்குக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் இவரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகளும் புரிந்துணர்வும் வெளிப்படுகின்றன.
படித்து ரசிக்க வேண்டிய ஒரு நூல்தான் இது. அரும்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் விலை ரூ. 75 நூலிலிருந்து சில வரிகள்:
"ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிப்போய் மகிழ்ந்திருந்தாலோ விலகிப்போய் வருந்தியிருந்தாலோ அதிலிருந்து ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று நம்பலாம்.
எனக்குச் சாதாரணமாகப் படுவது உங்களுக்குக் கற்றுக் கொள்ளும் ஓர் உயர்ந்த விஷயமாகவும்
உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றுவது எனக்கு விசேஷ அம்சம் உடையதாகவும் இருக்கலாம். நீங்களும் நானும் கற்பது - நிற்கப்போவதில்லை என்பதே உண்மை. "
Monday, December 1, 2003
JK's Letters to the Schools - 10
To observe a cloud with all the light of the world in it, to follow a stream chattering down the hill; to look at your friend with the sensitivity in which there is no resistance and to see youself as you are without the shades of denial or easy acceptance; to see yourself as part of the whole; to see the immensity of the universe - this is observation: to see without the shadow of yourself. - by J.K.
ஜே.கே - யின் குறிப்புக்களைப் படிக்கும் போது எனக்குள் எழுந்த தாக்கங்களை இங்கு தருகின்றேன்.
இந்த உலகம் பல அற்புதங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கே இயற்கை எனும் அழகு இருக்கின்றது. துள்ளித் திரியும் விலங்குகள், சிறகை விரித்துப் பறக்கும் புல்லினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் நம் கண்களுக்கு அதிசயமாய் தென்படும்
உயிரினங்கள் இப்படிப் பல; அதுமட்டுமல்ல. பிறவிகளிலேயே அற்புதப் பிறவியாக மனித இனம்; மனிதன் நாளுக்கு நாள் அடையும் வளர்ச்சி; இப்படி எங்கெங்கு பார்த்தாலும் அற்புதங்கள் தான் இந்த உலகில் நிறைந்திருக்கின்றன.
மனம்; அந்த மனத்தில் எழும் எண்ணங்கள்; சிந்தனைகள் செயல் வடிவம் பெற மனிதன் எடுக்கும் முயற்சிகள்; இவைகள் கூட அற்புதமானவைதான். இந்த அற்புதங்களை என்னுடைய ஆழ் மனத்தின் கற்பிதங்கள் பாதிக்காமல் நான் பார்க்க முயற்சிக்கின்றேனா???
இன்று மனம் சோகமாக இருக்கின்றது; காய்ந்து தரையில் பரந்து கிடக்கும் இலைகளைப் பார்க்கும் போது இயற்கையே என்னுடைய சோகத்தைப் பகிர்ந்து கொண்டு விட்டதோ என நினைக்கும் வகையில் உலகமே சூன்யமாகப் படுகின்றது. அடுத்த நிமிடமே சந்தோஷமான ஒரு தகவல் கிடைக்க, உடனே மனம் ஆனந்தத்தில் அலைமோதுகின்றது. தரையில் கிடக்கும் காய்ந்த சிவப்பு நிற இலைகள் என்னை வரவேற்பதற்காகப் போடப்பட்ட சிவப்புக் கம்பளமாக
மனதில் தோன்றுகின்றது. உலகமே இப்போது எனக்கு அழகாகத் தோன்றுகின்றது.
உலகம் நம் மனத்தைப் பொறுத்தே அமைகின்றது!
ஒன்றைப் பார்க்கும் பொழுது, அதனைப் புரிந்து கொள்ள முயலும் பொழுது அதனை அதன் தன்மை கெடாமல் நமது சுய எண்ணங்கள் பிரதிபலிக்காமல் அதனைப் பார்க்க முயலும் போதுதான் உண்மையான அதன் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய சிந்தனைகளின் மொத்த வடிவம் பற்பல சிறிய சிந்தனைகளின் கோர்வை. ஒவ்வொரு கணமும் மனதில் எண்ணற்ற சிந்தனைக் குவியல்கள் எழுகின்றன. மனம் அந்த எண்ணங்களை process செய்து அதற்கு ஒரு summary உருவாக்கி மனதில் சேர்த்து வைத்துக்கொள்கின்றது. இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் பற்பல தகவல்கள் மனதில் உருவாகிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.
ஒரு பொருளை உள்ளதை உள்ளவாறு பார்க்கத் தெரிந்தவராக நான் இருக்கின்றேனா என்பதை மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு புதிய விஷயத்தை எந்த யோசனையும் இல்லாமல் எனக்குப் பிடித்த வகையில் வியாக்கியானம் செய்து விட்டுப் போகும் போது எனது சிந்தனை அங்கு கொஞ்சமும் வேலை செய்யாமல் போய்விடுகின்றது. அவசர உலகத்தில் வாழும் நமக்கு இது மிகப் பெரிய ஒரு சோதனைதான். அவசர அவசரமாக ஒன்றினைப் பார்க்கின்றோம். பார்க்கின்ற, கேட்கின்ற ஒன்றினை முழு கவனத்தோடு உணர்வதில்லை; ஆழமாக யோசிக்காமல் உடனே ஒரு அவசர முடிவுக்கு வந்து விடுகின்றோம். நமது மனதில் உருவாகியிருக்கும் எண்ணம் தான் சரியான ஒன்று என்பதை நிலை நாட்ட ஆயிரம் சாக்குப் போக்குகளை உருவாக்குகின்றோம். உண்மையான புரிந்துணர்விற்கு இது கொஞ்சமும் உதவ முடியாது. நாம் அனுபவிக்கும், பார்க்கும், பழகும் அத்தனை விஷயங்களையும் 'விழிப்புணர்வோடு' 'திறந்த மனத்தோடு' பார்ப்பதே அறிவுடமை. ஒரு மாயத் திரையை மனதில் வைத்துக் கொண்டும் பற்பல சாக்குப் போக்குகளைக் கற்பித்துக் கொண்டும், காரண காரியங்களை உருவாக்கிக் கொண்டும் பொய்யான ஒரு விஷயத்தையோ, சரியற்ற ஒன்றினையோ, முறையற்ற ஒரு செயலையோ நியாயப்படுத்துவதில் சிறிதளவும் பலனில்லையே.
நான், வானம் மஞ்சள் நிறம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வானம் மஞ்சள் நிறமாகப் போய்விடப்போவதில்லை. உண்மையைப் பார்க்க மனம் அஞ்சும் நிலையை நான் பெற்றிருந்தால் அந்த உணமையை உணர மனதிற்கு தைரியத்தை நான் வளர்த்துக் கொள்வது தானே சரியான செயல்!
ஜே.கே - யின் குறிப்புக்களைப் படிக்கும் போது எனக்குள் எழுந்த தாக்கங்களை இங்கு தருகின்றேன்.
இந்த உலகம் பல அற்புதங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கே இயற்கை எனும் அழகு இருக்கின்றது. துள்ளித் திரியும் விலங்குகள், சிறகை விரித்துப் பறக்கும் புல்லினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் நம் கண்களுக்கு அதிசயமாய் தென்படும்
உயிரினங்கள் இப்படிப் பல; அதுமட்டுமல்ல. பிறவிகளிலேயே அற்புதப் பிறவியாக மனித இனம்; மனிதன் நாளுக்கு நாள் அடையும் வளர்ச்சி; இப்படி எங்கெங்கு பார்த்தாலும் அற்புதங்கள் தான் இந்த உலகில் நிறைந்திருக்கின்றன.
மனம்; அந்த மனத்தில் எழும் எண்ணங்கள்; சிந்தனைகள் செயல் வடிவம் பெற மனிதன் எடுக்கும் முயற்சிகள்; இவைகள் கூட அற்புதமானவைதான். இந்த அற்புதங்களை என்னுடைய ஆழ் மனத்தின் கற்பிதங்கள் பாதிக்காமல் நான் பார்க்க முயற்சிக்கின்றேனா???
இன்று மனம் சோகமாக இருக்கின்றது; காய்ந்து தரையில் பரந்து கிடக்கும் இலைகளைப் பார்க்கும் போது இயற்கையே என்னுடைய சோகத்தைப் பகிர்ந்து கொண்டு விட்டதோ என நினைக்கும் வகையில் உலகமே சூன்யமாகப் படுகின்றது. அடுத்த நிமிடமே சந்தோஷமான ஒரு தகவல் கிடைக்க, உடனே மனம் ஆனந்தத்தில் அலைமோதுகின்றது. தரையில் கிடக்கும் காய்ந்த சிவப்பு நிற இலைகள் என்னை வரவேற்பதற்காகப் போடப்பட்ட சிவப்புக் கம்பளமாக
மனதில் தோன்றுகின்றது. உலகமே இப்போது எனக்கு அழகாகத் தோன்றுகின்றது.
உலகம் நம் மனத்தைப் பொறுத்தே அமைகின்றது!
ஒன்றைப் பார்க்கும் பொழுது, அதனைப் புரிந்து கொள்ள முயலும் பொழுது அதனை அதன் தன்மை கெடாமல் நமது சுய எண்ணங்கள் பிரதிபலிக்காமல் அதனைப் பார்க்க முயலும் போதுதான் உண்மையான அதன் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய சிந்தனைகளின் மொத்த வடிவம் பற்பல சிறிய சிந்தனைகளின் கோர்வை. ஒவ்வொரு கணமும் மனதில் எண்ணற்ற சிந்தனைக் குவியல்கள் எழுகின்றன. மனம் அந்த எண்ணங்களை process செய்து அதற்கு ஒரு summary உருவாக்கி மனதில் சேர்த்து வைத்துக்கொள்கின்றது. இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் பற்பல தகவல்கள் மனதில் உருவாகிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.
ஒரு பொருளை உள்ளதை உள்ளவாறு பார்க்கத் தெரிந்தவராக நான் இருக்கின்றேனா என்பதை மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு புதிய விஷயத்தை எந்த யோசனையும் இல்லாமல் எனக்குப் பிடித்த வகையில் வியாக்கியானம் செய்து விட்டுப் போகும் போது எனது சிந்தனை அங்கு கொஞ்சமும் வேலை செய்யாமல் போய்விடுகின்றது. அவசர உலகத்தில் வாழும் நமக்கு இது மிகப் பெரிய ஒரு சோதனைதான். அவசர அவசரமாக ஒன்றினைப் பார்க்கின்றோம். பார்க்கின்ற, கேட்கின்ற ஒன்றினை முழு கவனத்தோடு உணர்வதில்லை; ஆழமாக யோசிக்காமல் உடனே ஒரு அவசர முடிவுக்கு வந்து விடுகின்றோம். நமது மனதில் உருவாகியிருக்கும் எண்ணம் தான் சரியான ஒன்று என்பதை நிலை நாட்ட ஆயிரம் சாக்குப் போக்குகளை உருவாக்குகின்றோம். உண்மையான புரிந்துணர்விற்கு இது கொஞ்சமும் உதவ முடியாது. நாம் அனுபவிக்கும், பார்க்கும், பழகும் அத்தனை விஷயங்களையும் 'விழிப்புணர்வோடு' 'திறந்த மனத்தோடு' பார்ப்பதே அறிவுடமை. ஒரு மாயத் திரையை மனதில் வைத்துக் கொண்டும் பற்பல சாக்குப் போக்குகளைக் கற்பித்துக் கொண்டும், காரண காரியங்களை உருவாக்கிக் கொண்டும் பொய்யான ஒரு விஷயத்தையோ, சரியற்ற ஒன்றினையோ, முறையற்ற ஒரு செயலையோ நியாயப்படுத்துவதில் சிறிதளவும் பலனில்லையே.
நான், வானம் மஞ்சள் நிறம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வானம் மஞ்சள் நிறமாகப் போய்விடப்போவதில்லை. உண்மையைப் பார்க்க மனம் அஞ்சும் நிலையை நான் பெற்றிருந்தால் அந்த உணமையை உணர மனதிற்கு தைரியத்தை நான் வளர்த்துக் கொள்வது தானே சரியான செயல்!
Subscribe to:
Posts (Atom)