Tuesday, November 2, 2010

மீராபெல்லா



என் வீட்டு தோட்டத்தின் மீண்டும் ஒரு தகவலுடன் இந்த இழையில் இன்று மீண்டும் வருகின்றேன். இடத்துக்கு இடம் சீதோஷ்ணத்திற்கு ஏற்ற வகையில் சில மரங்களும் செடிகளும் வளர்கின்றன. அந்த வகையில் குளிர்த்தேசத்து நாடுகளில் பிரபலமான ஒரு பழம் மீராபெல்லா. இது இரண்டு வக வர்ணங்களில் ஜெர்மனியில் பல இடங்களில் விளைகின்றது. மஞ்சள் நிறத்திலும் கருஞ்சிவப்பு நிறத்திலும் இப்பழங்கள் விளைகின்றன. செர்ரி பழம் போன்று வடிவம். ஆனால் சுவையில் செர்ரியை விட வித்தியாசமானது இப்பழம்.



நவம்பர் தொடங்கி மார்ச் மாதம் பாதி வரை மீராபெல்லா மரத்தில் இலைகளே இருக்காது. மொட்டையாக மரம் நிற்கும். பூவோ பழமோ தளிரோ இலையோ ஏதும் இருக்காது. மார்ச் மாதக் கடையியில் இளவேனிர்கால தொடக்கத்தில் வெள்ளையும் இளம் சிவப்பும் கலந்த வர்ணத்தில் பூக்களே நிறைந்திருக்கும். தேவ லோகத்து மரம் போன்ற ஒரு தோற்றமளிக்கும் இம்மரம். இப்படத்தை பாருங்கள்.



பின்னர் ஏப்ரல் தொடங்கி பூக்கள் கொட்டி இளம் தளிர்கள் தோன்றி இலைகள் வந்து ஜூன் மாத வாக்கில் பழங்கள் நிறைந்து இருக்கும் இந்த மரம்.



குருவிகள் விரும்பி தேடி வந்து இங்கு அமர்ந்து இப்பழங்களை சுவைக்கத் தவருவதில்லை.




இங்கு மீராபெல்லா பழங்களைக் கொண்டு ரொட்டிக்குத் தேவைப்படும் ஜேம் பிரபலமான ஒன்று. இனிப்பு பண்டங்களிலும் சேர்த்து பேக் செய்வதுமுண்டு. ஆனாலும் இதன் சுவையை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் அப்படியே மரத்திலிருந்து பறித்து சாப்பிட வேண்டும்.:-)

மீராபெல்லா வைன், லிக்கர் ஆகியவையும் பிரபலமானவை. பல் கடைகளில் இவை கிடைக்கும்.


ஆங்கிலத்தில் இப்பழத்தை Mirabelle Plum என்றும் டோய்ச் மொழியில் Mirabelle என்றும் இது அழைக்கப்படுகின்றது. இது ப்ளம் பழ வகையைச் சார்ந்தது. இப்பழத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:
http://en.wikipedia.org/wiki/Mirabelle

அன்புடன்
சுபா

Wednesday, August 11, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்.. 2

எனது தோட்டத்திலிருந்து...

திராட்சை ஓரளவு பெரிதாகி பச்சை நிறத்திலேயே உள்ளது. அடுத்த மாதம் நிறம் மாறி கரு நீலமாக காட்சியளிக்கும். சற்று பொறுத்திருக்க வேண்டும்.

பூவோடு இருந்த தக்காளிச் செடியில் காய்கள் நிறைய வந்துள்ளன. ஏழெட்டு தக்காளிப் பழங்களை அறுவடை செய்தாகிவிட்டது. இரண்டு மிளகாய்களும் கூட.






எனது மாமனார் தோட்டத்தில் ஒரு சிறு பகுதியை எனது காய்கறி பயிர்களுக்காக வைத்திருக்கிறேன். அதில் நான் நட்டு வைத்த 3 பெரிய தக்காளிச் செடிகள், cocktail tomato செடிகள் இரண்டும் நிறைய காய்களைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றன. நீளமான வகை மிளகாய் செடி இரண்டும் ஒரு பறங்கிக்காய் செடி ஒன்றும் கூட இரண்டு காய்களுடன் அழகாக வளர்ந்திருக்கின்றன. சிறு கன்றுகளாக நட்டு வைத்து ஒரு இடைவெளிக்குப் பின்னர் சென்று பார்க்கும் போது காய்களும் பூக்களும் நிறைந்து இருப்பதை பார்க்கும் போது ஆச்சரியம் தோன்றாமல் இல்லை.

இது எப்போதும் எங்கும் சர்வ சாதரணமாக நடப்பதுதானே என நினைத்து விட முடியவில்லை. உலகில் நடக்கின்ற பல ஆச்சரியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றுதான்..:-)



எனது காய்கறிகளைப் பார்க்க விரும்புபவர்களுக்குச் சில படங்கள் இணைத்துள்ளேன். (மிளகாய், தக்காளி, பறங்கிக்காய்.)





அன்புடன்
சுபா

Wednesday, July 7, 2010

கோவைச் செம்மொழி மாநாடு - பேராளர் அறிமுகம் KTV





கோவைச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்னர் ஜூன் 20 தேதி கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் தொடரில் மாநாட்டிற்கு வருகை தரும் பேராளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக இப்பேட்டி எடுக்கப்பட்டு அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கும் மறு ஒலிபரப்பு கண்டது.

Youtube:
https://www.youtube.com/watch?v=Bc3lthJu090

Tuesday, July 6, 2010

செம்மொழி மானாட்டு நிகழ்வுகள் - அமர்வு (தலைமை)

தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான ஒரு அமர்வுக்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:
  1. திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான நீண்ட கால பராமரிப்பு வழி முறைகள்
  2. திரு.மணியரசன் (மலேசியா) - இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை
  3. முனைவர்.கா.துரையரன் (சென்னை) - இணையத்தில் தமிழ் நூல்கள்
  4. முனைவர்.கு.கல்யாண சுந்தரம் (சுவிஸ்லாந்து) - தமிழ் மின்னணு நூலகத்தின் ஆக்குமுறை
வீடியோ பதிவுகளைக் காண:

Monday, July 5, 2010

செம்மொழி மாநாட்டு சொற்பொழிவு - தரவுகள் சேகரிப்பு (உத்தமம்)

செம்மொழி மாநாட்டோடு இணைந்து நிகழ்ந்த உத்தமம் மாநாட்டில்..!

தரவுகள் சேகரிப்பு - முனைவர்.க சுபாஷிணி


Sunday, July 4, 2010

செம்மொழி மாநாட்டு சொற்பொழிவு - ஆவணப்பாதுகாப்பு


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை 2010 - 26/06/10

ஆவணப்பாதுகாப்பு - முனைவர்.க சுபாஷிணி 

https://www.youtube.com/watch?v=R16FnIc0ErY
https://www.youtube.com/watch?v=Qk2ijSqAAsg
https://www.youtube.com/watch?v=hhAvZMJBJGY
https://www.youtube.com/watch?v=1p1niq5XgWk

Saturday, June 12, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய திராட்சை செடி (மரம்/கொடி) ஒன்று வாங்கி அனது தோட்டத்தில் நட்டு வைத்தேன். ஓரளவு வளர்ந்து நிறைய இலைகள் கடந்த ஆண்டு கோடை காலத்தில் (ஜூன் - செப்ட்). ஆனால் ஒரு பழத்தையும் காணோம். பெரிய ஏமாற்றமாகிப் போனது எனக்கு. எனது இல்லத்தின் தோட்டத்தில் சூரிய வெளிச்சம் கொஞ்சம் குறைவு. திராட்சைக்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை. ஆக அதனால் தான் திராட்சை வரவில்லையோ என நினைத்து எனது மாமனார் தோட்டத்திற்கு அதனை கொண்டு போய் நட்டு வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். பல வேலைகளுக்கு இடையே அந்த திட்டம் மறந்து விட்டது. நேற்று மாலை தற்செயலாக எனது திராட்சைக் கொடியைப் பார்த்தால் ஆச்சரியம். அழகான குட்டி திராட்சைகள். இது சிவப்பு நிறமாக மாறக்கூடிய திராட்சை. ஆனால் முதலில் பச்சை நிறத்தில் தான் தோன்றுகிறது.

அதன் படத்தை இங்கு இணைத்திருக்கின்றேன்.


மேலும் நான் ஏப்ரல் இறுதியில் நட்டு வைத்த நான்கு தக்காளி கன்றுகளும் இப்போது பூவுடன் இருக்கின்றன. அவற்றை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன். ஜெர்மனியின் சீதோஷ்ண நிலைக்கு வீட்டில் பயிர்கள் நட்டு சிறப்பாக வளர்ப்பது சற்று சிரமம். அது ஒரு தனிக் கலை. புத்தகம் வாங்கி வைத்து படித்து எந்த செடி எந்த மாதிரியான இடத்தில் வைத்தால் நன்றாக வளரும் என தெரிந்து கொண்டு நட வேண்டும். ஏப்ரலிலிருந்து அக்டோபர் கடைசி வரை இது எனக்கு ஒரு மனம் நிறைந்த பொழுது போக்கு. மேலும் எனது அனுபவத்தை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

அன்புடன்
சுபா