Wednesday, August 11, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்.. 2

எனது தோட்டத்திலிருந்து...

திராட்சை ஓரளவு பெரிதாகி பச்சை நிறத்திலேயே உள்ளது. அடுத்த மாதம் நிறம் மாறி கரு நீலமாக காட்சியளிக்கும். சற்று பொறுத்திருக்க வேண்டும்.

பூவோடு இருந்த தக்காளிச் செடியில் காய்கள் நிறைய வந்துள்ளன. ஏழெட்டு தக்காளிப் பழங்களை அறுவடை செய்தாகிவிட்டது. இரண்டு மிளகாய்களும் கூட.






எனது மாமனார் தோட்டத்தில் ஒரு சிறு பகுதியை எனது காய்கறி பயிர்களுக்காக வைத்திருக்கிறேன். அதில் நான் நட்டு வைத்த 3 பெரிய தக்காளிச் செடிகள், cocktail tomato செடிகள் இரண்டும் நிறைய காய்களைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றன. நீளமான வகை மிளகாய் செடி இரண்டும் ஒரு பறங்கிக்காய் செடி ஒன்றும் கூட இரண்டு காய்களுடன் அழகாக வளர்ந்திருக்கின்றன. சிறு கன்றுகளாக நட்டு வைத்து ஒரு இடைவெளிக்குப் பின்னர் சென்று பார்க்கும் போது காய்களும் பூக்களும் நிறைந்து இருப்பதை பார்க்கும் போது ஆச்சரியம் தோன்றாமல் இல்லை.

இது எப்போதும் எங்கும் சர்வ சாதரணமாக நடப்பதுதானே என நினைத்து விட முடியவில்லை. உலகில் நடக்கின்ற பல ஆச்சரியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றுதான்..:-)



எனது காய்கறிகளைப் பார்க்க விரும்புபவர்களுக்குச் சில படங்கள் இணைத்துள்ளேன். (மிளகாய், தக்காளி, பறங்கிக்காய்.)





அன்புடன்
சுபா