Friday, October 20, 2017

ஜாதகப் பொறுத்தம்

திருமணத்திற்கு சாதியெல்லாம் பிரச்சனை இல்லை.. இப்போது ஜாதகப் பொறுத்தம் தான் பிரச்சனை என குமுறுகிறார்கள் பலர்..
சரி.. ஜாதகம் பார்த்து கல்யாணம் கட்டினா என்ன பார்க்காமல் கட்டினா என்ன? கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனையும் மனித குலத்துக்கே உள்ள எல்லா பிரச்சனைகளும் வரத்தானே போகின்றன..!!
பிறகு எதற்கு இந்தத் தேவையற்ற ஜாதகத்தைப் பார்த்து பல இளம் ஆண்களையும் பெண்களையும் திருமணம் செய்ய விடாமல் தடுக்கின்றார்கள் “பெரியவர்கள்”..?
ஜாதகம் பார்த்து திருமணம் செய்தவர்கள் ஒரு பிரச்சனை இல்லாமல் என்றும் ஆனந்தக் கடலில் நீந்திக் கொண்டே பயணம் செய்கின்றார்களா என்ன?
ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்து வாழும் பல கோடி மக்கள் அனைவரும் துன்பக் கடலில் தவிக்கின்றார்களா என்ன??
-சுபா

1 comment: