Tuesday, April 24, 2018

ரைன் நதிக்கரையில்

மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்..!
நெடுநாட்கள் காணாத ஏக்கத்தில்
என்னை வரவேற்க
பூக்களை அருகில் வைத்து
காத்திருக்கின்றாள்
ரைன் நதி.. என் தோழி!
குளிர் மறைந்து விட்டது
வசந்தம் வந்து விட்டது
இருள் அகன்று
ஒளி படர்கின்றது
சிலர் நடக்கின்றார்கள்
கப்பல்கள் பயணிக்கின்றன
நாய்களுடனும் பியர் பாட்டிலுடனும் ஓரிரு வீடுகளற்றோர்
குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடைபயிலும் இளம் தாய்மார்கள்
இவர்களுடன்
நானும் சேர்ந்து நடக்கின்றேன்
ரைன் நதியின் இயல்பான சலனத்தை ரசித்தபடி..!
-சுபா


No comments:

Post a Comment